Friday, June 29, 2012

HEARTILY WELCOME

பொன்னான பாரதம் 

மண்ணும் பொன்னாய் மின்னிய புண்ணிய பூமி இது ,
மரகதமும் மாணிக்கமும் மலைகளாய்  ஜொலித்த தேசம் இது
கனவாய் இருந்த தேசம் இது 
 பல  கனவான்களுக்கு இரையாகிப்போன தேசம் இது 

பாலும் தேனும் ஆறாய்  ஓடிய  தேசம் இது
நாற்றமடித்த சாக்கடையை  போல் ஆனது இன்று   


 என் உயிர் சகோதர & சகோதரிகளே , 

உங்கள் அனைவருக்கும் நமது சொர்ணபாரத அறக்கட்டளையின் சார்பாக நல்வரவுகள் உங்கள் அனைவருடனும் சில பல விசயங்களை பகிர்ந்துகொள்ளவும் ஆலோசிக்கவும் விவாதிக்கவும் அதனை நடைமுறைபடுத்தவும் சித்தம் கொண்டு இந்த வலைபக்கத்தை தங்கள் முன் இடுகின்றேன் 

இன்று நம் முன் வெறும் கவலைகளும் பிரச்சனைகளும் துக்கங்களும் ஏக்கங்களும் விபசாரங்களும் மட்டுமே நிறைந்துள்ளன எத்தனை மோசடிகளும் குழப்பங்களும் உள்ளன .மனிதனை மனிதன் உண்கின்றான் அது  நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ இப்படி இன்றைய சூழ்நிலைகளை வர்ணிக்க சென்றால் பக்கங்கள் நீண்டுகொண்டே செல்லும் ஆனால் இதற்கு முடிவு என்ன ?
விடை ?தேடி புறப்படுவோம் வாருங்கள்......

கருத்துகளையும் கரங்களையும் ஒன்றாய் இணைத்திடுவோம் 
இனி ஒரு உலகம் செய்திடுவோம்...

No comments:

Post a Comment