எனது கவிதைகள்

நாளைய  சமுதாயம் 
நாளைய  சமுதாயம்
    ஒரு நட்சத்திர  சமுதாயம்
மோட்டுவளையை   பார்த்திருப்பதல்ல 
மோகன நிலவில் குடியிருப்பதுதான் 
நாளைய  சமுதாயம் 
சோர்ந்து  இருப்பதல்ல 
சொர்க்கத்தையும்  சொந்தமாக்குவது  தான் 
நாளைய  சமுதாயம் 
பைந்தமிழ்  எங்கும்  பரவியிருப்பதுதான்
நாளைய  சமுதாயம்
 தம்  கரங்களை மட்டுமே  நம்பி  இருப்பது
நாளைய  சமுதாயம்
 தன்னிகரில்லா சமுதாயம்  தான்  
காமகளியாட்டங்களில்  முழ்கி  இருப்பதல்ல
  நாளைய  சமுதாயம்
கதிரவனையும்  தாண்டி  உலகத்தின்  கடைசியையும்  காணப்போவது 
தான்
நாளைய  சமுதாயம்
 காணல் நீரல்ல 
 கனிச்சோலையாய்  இருப்பதுதான்
 நாளைய  சமுதாயம்


இது எனது 13 வயதில்  எழுதிய கவிதை 



No comments:

Post a Comment